மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி எதிரே வந்த  பேரூந்துடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்திவர்களே காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top