கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ருஹுணுகுமாரி ரயிலில், மாத்தறை வெலிகம பகுதியில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், ரயிலில் இரண்டு பேர் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவரும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

0 comments:
Post a Comment