இந்திய - இலங்கை மீனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண விரைவில் இந்தியா செல்ல தீர்மானித்துள்ளதாக, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

இதுவரை 213 இலங்கை மீனவர்கள் மற்றும் 40 மீன்பிடிப் படகுகளையும் இந்திய பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இவர்களை விடுவிப்பது மற்றும் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில், இந்திய மத்திய அரசின் மீன்பிடித்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் அங்கு செல்ல தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement

0 comments:

Post a Comment

 
Top