புற்றுநோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கான சர்வதேச தினம் இன்று இலங்கையில் முதற்தடவையாக அனுஷ்டிக்கப்படுகின்றது.


 புற்றுநோயிலிருந்து குணமடைந்து சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டுவரும் நபர்களை நினைவூட்டும் வகையில் இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 இலங்கையில் வருடாந்தம் 15 ஆயிரம் பேர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 இவ்வாறு ஏற்படுகின்ற புற்றுநோய்களில் பலவற்றை குணப்படுத்துவதற்கான இயலுமை காணப்படுவதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top