படகு விபத்தில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா நோக்கிப் பயணம் செய்த புகலிடக் கோரிக்கையாளர் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தப் படகில் பயணித்தவர்கள் உயிரிழந்திருக்கக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

 எட்டு உயிர்காப்பு அங்கிகள் கொகோஸ் தீவுகளில் கரையொதுங்கியுள்ளன. இந்த உயிர் காப்பு அங்கிகளை எந்த நாட்டவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது பற்றிய தகவல்களை அவுஸ்திரேலிய காவல்துறையினர் இதுவைரயில் வெளியிடவில்லை.

 சம்பவம் தொடர்பில் காவல்துறையினரும், எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top