இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் காணப்படுகின்ற டைசைனமைட் என்ற இரசாயன பொருள் தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ள வேண்டும் என்று அரச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து பால்மாவிலும் இந்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இது தொடர்பில் ஏற்கனவே உலக சுகாதார ஸ்தாபனத்திடம், இலங்கையின் சுகாதார அமைச்சு வினவி இருந்தது.

இதன் போது இலங்கைக்கு இறக்கமதியாகின்ற பால்மா பொருட்களின் மனிதனின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு டைசைனமைட் என்ற இரசாயன பொருள் காணப்படுவதில்லை என்று உலக சுகாதார ஸ்தாபனத்தால் தெரிவிக்கப்பட்டது.


Advertisement

0 comments:

Post a Comment

 
Top