மேற்படி நிகழ்வு அறபா நகர்இ நுரைச்சோலை எனும் கிராமத்தில் வாமி நிறுவனத்தின் அனுசரனையுடன் கட்டி முடிக்கப்பட்ட மாடிக்கட்டிடத்தின் திறப்பு விழா இன்று 2013-03-16 ஜம்மியது தஹ்வதுஸ் ஸலபிய்யாவின் தலைவர் தேசமானி எம்.கே.றயீசுதீன் அவர்களின் தலைமையின் இன்று 11.30 மணி அளவில் நடைபெற்றது நிகழ்வில் வாமி நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் உமர் இத்ரீஸ் (எம்.ஏ)
அவர்களும் மேலும் வாமி நிறுவனத்தின் கட்டிட நிர்மாணப்பிரிவு பொறுப்பாளர் எம்.ஏ. இஸ்ஸதீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.பல வருடகாலமாக ஒலை குடிசையில் இயங்கி வந்த மத்ரசாவினை வாமி நிறுவனத்தின் பணிப்பாளர் அவர்கள் முன்வந்து இக்குறையினை நிவர்த்தி செய்து தந்தமைக்கு ஜம்மியாவும்,பள்ளிபரிபாலன சபையும், ஊர்மக்களும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர். மேலும் நிகழ்வில் ஜம்மியாவின் செயலாளர் என்.எம் அஸ்ஹர் ஆசிரியர் அவர்களும் மத்ரசாவின் அதிபர் கே.எம். நளீம், எஸ் மஸ்பிர் மற்றும் கிராமிய அபிவிருத்தி நகர்வுக்கான அமைப்பின் தலைவர் எஸ்.எச்.எம்.வாஜித் கலந்து சிறப்பித்தனர்.

எஸ்.எச்.எம்.வாஜித்
2013.03.16



0 comments:
Post a Comment