சிறு நீரக நோயினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 43 வயதுடைய கமலினி நாகராசா என்ற பெண்ணுக்கு சத்திர சிகிச்சைக்காக அவசர நிதியுதவி தேவைப்படுகின்றது. இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்ட இவர் தற்போது வவுனியா வைத்தியசாலைகயில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவருக்கு இம்மாதம் பெப்ரவரி 21 ஆம் திகதிக்கு முன்னர் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்கு 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் செலவாகும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக அந்தப் பெண்ணுடைய கணவன் வி.நாகராராசா கூறுகின்றார்.
வறுமையில் வாடும் இக்குடும்பத்தினர் இப்பெண்ணின் சிகிச்சைக்கான நிதியைப் பொதுமக்களிடம் இருந்து எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
இக்குடும்பத்தினருடைய வங்கிக் கணக்கு இலக்கம் 8610012525, கமர்ஷியல் வங்கி, வவுனியா.
தொலைபேசி - 0778560843, 0775047183.
0 comments:
Post a Comment