கிளிநொச்சி குஞ்சிப்பரந்தனில் நீர் நிரம்பியிருந்த குழியொன்றில் இருந்து தாய் மற்றும் மகனின் சடலங்களை இன்று காலை கிளிநொச்சி பொலிஸார் மீட்டுள்ளனர்.
குஞ்சிப்பரந்தனை சேர்ந்த 30 வயதுடைய சுகுமார் நிசாந்தினி மற்றும் அவரது 5 வயதான புதல்வர் கிருத்திகன் ஆகிய இருவருடைய சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை முதல் இருவரையும் காணாத நிலையில் உறவினர்கள் தேடிச் சென்றபோதே வீதி வேலை செய்பவர்களால் தமது தேவைக்காக வெட்டப்பட்ட நீர் நிரம்பிய குழியில் இருந்து இந்த சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
சடலங்கள் மீட்கப்பட்ட இடத்திற்கு சென்ற  கிளிநொச்சி மாவட்ட நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலங்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.
அவரின் பணிப்புரையின் பேரில் பிரேத பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top