அரச பஸ் தரிப்பிடத்தில் பஸ்களை இயக்க ஆரம்பிக்கும் போது அதிகளவில் புகை வெளியேறுவதால் பயணிகள் சுகாதார சீர் கேட்டை எதிர்கொண்டு வருகின்றனர்.

இங்கு சேவையில் ஈடுபடும் பஸ்கள் பாவனைக்கு உகந்தவையாக தெரியவில்லை ஆனால் புதிய பஸ்கள் கிடைக்காமையால் வேறுவழி இன்றி இயக்கப்பட்டு வருகின்றன.சில வேளைகளில் பஸ்கள் இடைவழியில் நின்றுவிடுவதால் பயணிகள் கீழே இறங்கி தள்ளி இயக்க வேண்டிய பரிதாப நிலையும் காணப்படுகின்றது.



மேலும்பஸ் ஆசனங்களும் கிழிந்த நிலையில் காணப்படுகின்றன இதனாலும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.




எனவே பயணிகளுக்குஅசௌகரியங்களை ஏற்படுத்தாத நல்ல நிலையிலுள்ள பஸ்களை சேவையில்விடுமாறுமன்னார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top