மன்னாரிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சமயத்தோண்டாற்றி, இந்து மக்களின் மனங்கவர் குருக்களாக விளங்கி வந்தார். தேசபந்து, தேசசக்தி, தேசகீர்த்தி, சமூகரத்னா, சமூகஒளி, ஆகம கிரியா பாவணர், சிவாச்சார்ய திலகம், மற்றும் கமலபுஷணம் போன்ற பல விருதுகளை பெற்று விளங்கினார்.
சமீபத்தில் லண்டன் சென்றிருந்த இவர் லண்டன் நேரப்படி இன்று மாலை 5.00 மணி அளவில் காலமானார்

. இவரின் எதிர்பாராத பிரிவுச்செய்தியால் மன்னார்வாழ் மக்கள், குறிப்பாக இந்து சமூகம் அதிர்ச்சியும் கவலையும் கொண்டுள்ளது. இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் -- பிரம்மஸ்ரீ ம. தர்மகுமாரசர்மா.

அன்னாரின் மறைவினால் ஆறாத் துயருற்றிருக்கும் இருக்கும் அவரது குடும்பத்தினர்க்கும் உறவினர்களுக்கும்  மன்னார் இணையம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு,அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
துன்பத்தை தாங்கிக்கொள்ளும் மனுவலுவை இறைவன் உங்களுக்கு கொடுக்கட்டும் ,,ஓம்சாந்தி ,,ஓம்சாந்தி ,,ஓம்சாந்தி ,, 

Advertisement

4 comments:

  1. கடவுளே.....அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்....

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. my deepest sympathy for his family.still i remember my wedding poja.

    ReplyDelete

 
Top